(லியோ)
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன்
ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 16ஆம் திகதி திங்கள்கிழமை மாலை திருக்கதவு
திறத்தல் வைபவத்துடன் ஆரம்பமானது .
மட்டு நகரில் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார
உற்சவம் 16ஆம் திகதி திங்கள்கிழமை மாலை
திருக்கதவு திறத்தல் உற்சவத்துடன்
பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 21.05.2016 ஆம் திகதி
சனிக்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ஆலய வருடாந்த உற்சவம் இனிதே நிறைவுபெறும் .
ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக
அலங்கார பூசைகள் ஆலய பிரதம பூசகர் .வ .
மாசிலாமணி தலைமையில் இடம்பெறும் .
ஆலய உற்சவத்தின் மூன்றாம்
நாள் சடங்கு 18.05.2016 புதன்கிழமை மாலை கல்யாணக்
கால் வெட்டும் சடங்கு இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாளின் ஊர்வலம் இடம்பெற்றது
.