மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் மேதின ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர்.

தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தும் வகையில் இந்த மேதின நிகழ்வு நடைபெற்றதுடன் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.