மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மேதின நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று உழகை;கும் வர்க்கத்தின் மேதின நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்பாடுசெய்த மேதின நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் மட்டக்களப்பு நகர் வரை நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக மாபெரும் மேதினக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உபதலைவர் கே.யோகவேள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான திரவியம் மற்றும் மகளிர் அணித்தலைவர் திருமதி செல்வி மனோகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேதின பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன் கட்சியின் தலைவரின் விசேட செய்தியும் வாசிக்கப்பட்டது.