மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்ற மேதின நிகழ்வு

சர்வதேச தொழிலாளர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு முச்சக்கர வண்டிகள் சாரதிகள் நலன்புரி சங்கத்தின் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு ஊறணிச்சந்தியில் இருந்து மாபெரும் முச்சக்கர வண்டிகளின் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியானது மட்டக்களப்பு காந்திபூங்காவினை அடைந்ததும் அங்கு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

முச்சக்கர வண்டி சாரதிகளின் நலன்கள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மேதின நிகழ்வு நடாத்தப்பட்டது.