முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காக நினைவேந்தல் சுடரேற்றலும், வழிபாடும்

(லியோ)

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ நீர்ப் பிள்ளையார்  ஆலய முன்றிலில் முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காக   நினைவேந்தல் சுடரேற்றலும், வழிபாடும்  இடம்பெற்றது
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில்  கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம் தலைமையில்  முள்ளியவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்காக   நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு வந்தாறுமூலை  ஸ்ரீ நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில்   19.05.2016 வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பஜனையை தொடர்ந்து ஆலய பிரதம பூசகர் சிவஸ்ரீ ஜெயபாலன் தலைமையில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாட்டினை தொடர்ந்து ஆலய  முன்றிலில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு முள்ளியவாய்க்காலில்  கொல்லப்பட்டவர்கள் நினைவு  கூறப்பட்டன .

இந்த நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் , கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் , தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட  கட்சி உறுப்பினர்கள் , மதத்தலைவர்கள் மற்றும்  பொதுமக்கள் என  பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் நிகழ்வினை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது .