ஒளடதம் (மருந்து) விற்பனை பிரதிநிதிகளின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு

  
(லியோ)

ஒளடதம் (மருந்து) விற்பனை  பிரதிநிதிகள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல்  நிகழ்வு  
15.05.2016  மட்டக்களப்பில் இடம்பெற்றது .

 கிழக்குமாகாண ஒளடதம் (மருந்து)  பிரதிநிதிகள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல்  நிகழ்வு ஒன்றியத்தின்  தலைவர் லின்டன் சேவியர் தலைமையில் மட்டக்களப்பு பாலமீன்மடு  முகத்துவாரம் லைட் ஹவுஸ் விடுதியில் 15.05.2016   ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது .

இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல்  நிகழ்வின் போது கடந்த காலத்தில் கிழக்குமாகாணத்தில்  ஒளடத   விற்பனை  செயல்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் , எதிர் காலத்தில்   ஒளடதங்களின் வளர்ச்சி ,மக்களின் தேவைகள் என்பதனை கருத்தில் கொண்டு  முன்னெடுப்புக்கள்  அமைய  வேண்டும் என்பது தொடர்பாக ஒளடத விற்பனை  பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மகப்பேற்று பெண்நோயியல் நிபுணர் மார்கண்டு திருக்குமார் , கௌரவ அதிதிகளாக உணவு  ஒளடதம் (மருந்து)   பரிசோதகர்களான எஸ் .தஸ்தகீன்  , எஸ் . ஜீவராஜா , என் .தேவநேசன் ,டி .வரதராஜா ,என் .விமலசேகரன் மற்றும்  கிழக்குமாகாண  ஒளடதம் (மருந்து)  பிரதிநிதிகளின் ஒன்றியத்தின் மட்டக்களப்பு ,அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தும்  ஒளடதம் (மருந்து)  விற்பனை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் .