(லியோ)
நலிவுற்றோர்களுக்கான சேவைகள் வினைத்திறனாகவும் ,
வெற்றிகரமாகவும் அமைய சமூக பராமரிப்பு நிலையத்தினால் நாடளாவிய ரீதியில் பல செயல்திட்டங்களை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
இதன் ஒரு செயல்திட்டமாக
மட்டக்களப்பு மாவட்டத்தின் சமூக பராமரிப்பு நிலையங்களிலிலும் பிரதேச செயலகங்களிலும் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்களுக்கான ஒரு நாள்
செயலமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கிழக்குமாகாண சமூக
சேவைகள் திணைக்கள பணிப்பாளர் என் .
மணிவண்ணன் தலைமையில் இன்று இடம்பெற்றது .
இன்று இடம்பெற்ற செயல்திட்டத்தில்
சமூக பராமரிப்பு செயற்திட்டத்தின் ஊடாக நலிவுற்றோர்களுக்கான சேவைகள்
வினைத்திறனாகவும் வெற்றிகரமாக அமைய எதுவாக சமூக பராமரிப்பு நிலைய எண்ணக்கரு
உருவாக்கப்பட்டு சமூக பராமரிப்பு நிலையங்களிலிலும் ,பிரதேச செயலகங்களிளிலும் பணியாற்றுகின்ற
பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள் , சிறுவர்
நன்னடத்தை உத்தியோகத்தர்கள் , சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ,
சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , போன்ற உத்தியோகத்தர்கள் தமது சேவைகளை தனித்தனியாக வழங்குவதை விட குழுவாக
இணைந்து நலிவுற்றோர்களுக்கு வழங்குவதனூடாக ஒரு பூரணமான சேவைகளை வழங்கு முடியும்
என்பதனை நோக்காக கொண்டு அனைத்து உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் இன்று இடம்பெற்ற செயலமர்வில் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் வளவாளராக ஜி .
ஆர் . பத்மசிரி கமலத் , சமூக சேவைகள் திணைக்கள முன்னாள் செயலாளரும் , சமூக பராமரிப்பு நிலைய செயற்திட்ட
இணைப்பாளருமான திருமதி . மானல் குரூப்பு ,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள்
திணைக்கள மற்றும் பிரதேச செயலக சமூக அபிவிருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .