மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் போலியான முறையில் இசைக்கச்சேரிக்கு டிக்கட் விற்பனை செய்த இருவரை நேற்று (06) காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு நகரில் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக கூறி மட்டக்களப்பு கல்லடிப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் டிக்கட் விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடி பொலிஸார் இசைக் கச்சேரி என பொய் கூறி இவர்கள் டிக்கட் விற்பனை செய்துள்ளதாகவும் அதன் மூலம் மூன்று இலட்சம் ரூபாய் பணம் சேகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு நகரில் இசைக் கச்சேரி நடைபெறவுள்ளதாக கூறி மட்டக்களப்பு கல்லடிப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் டிக்கட் விற்பனை செய்துள்ளனர்.
இது தொடர்பில் விசாரணை செய்த காத்தான்குடி பொலிஸார் இசைக் கச்சேரி என பொய் கூறி இவர்கள் டிக்கட் விற்பனை செய்துள்ளதாகவும் அதன் மூலம் மூன்று இலட்சம் ரூபாய் பணம் சேகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.