(லியோ)
கல்லடி முகத்துவாரம் கடல்மீன்கள் விளையாட்டு கழகத்தின் 50 வது வருட பூர்த்தியினை முன்னிட்டு பாரம்பரிய கலாசார வினோத
விளையாட்டு நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் கடல்மீன்கள் விளையாட்டு கழகத்தின் 50 வது வருட பூர்த்தியினை மற்றும் தமிழ் சிங்கள சித்திரை புதுவருடத்தையும்
முன்னிட்டு கலாசார விளையாட்டு நிகழ்வுகள் கடல்மீன்கள் விளையாட்டு
கழகத்தின் தலைவர் கே .யோகராஜா தலைமையில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலய மைதானத்தில் இன்று இடம்பெற்றது
இடம்பெற்ற சித்திரை புதுவருட கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பல பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள்
இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு
மாவட்ட பிராந்திய மொபிடல் நிறுவன முகாமையாளர்
தர்மேந்திரா , கல்லடி இலங்கை கடற்படை பிரதான லெப்டினன்ட்
எ .ஜி . சி . பி . திசாநாயக்க , மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்
அண்ணாச்சி மற்றும் விளையாட்டு கழக உறுப்பினர்கள் , பொதுமக்கள் ,சிறுவர்கள்
என பலர் கலந்து சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
,