மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

 (லியோ)

கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்   2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லுரியில் இடம்பெற்றது .


கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட    இணைப்பாளரும் ,   மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் தலைவருமான . எ .எல் . எம் . மீரா சாய்பு ஏற்பாட்டில்  மட்டக்களப்பு கல்வி  வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில்   2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த    மாணவர்களை கௌரவித்து பதக்கங்களும் ,சான்றிதழ்ககளும் வழங்கும்  நிகழ்வும்    கல்லூரி  அதிபர்  விமல்ராஜ் தலைமையில் 03.05.3016 செய்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  14 மாணவர்களுக்கு பதக்கங்களும் ,சான்றிதழ்ககளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக பிரதி தலைவரும் , சட்டத்தரணியுமான  கணேசராஜா , கௌரவ அதிதிகளாக சிவில் சமூக செயலாளர் டொமினிக் ஜோர்ச் , மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் . உதயகுமார் மற்றும்   2015 ஆம் ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த  கல்லூரி மாணவர்கள் ,கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர் .