ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளருக்கு அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பதவி

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரான சாணக்கியன் இராசமாணிக்கம் சில மூன்று பிரதேச செயலகங்களுக்கான அபிவிருத்திக்கு இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமதிக்கப்பட்டுள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று,போரதீவுப்பற்று,மண்முனை மேற்கு(பட்டிப்பளை)ஆகிய பிரதேச செயலகங்களுக்கே இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதம் பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளரான சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

பிரதேச அபிவிருத்திக்குழுவின் வரலாற்றில் முதன்முறையாக அமைப்பாளர் ஒருவர் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.