பாடுமீன்களின் சமர் எதிர்வரும் 14ஆம் திகதி (சனிக்கிழமை) மட்டக்களப்பில்


(லியோ )

நேர்மையான வெற்றி தோல்விகளை மனதார ஏற்றுக்கொள்ளும் உறுதியான மனப்பக்குவத்துடன் - மட்டுமா நகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளான புனித மிக்கேல் கல்லூரியும், மெதடிஸ்த மத்திய கல்லூரியும் மோதவுள்ளன. 
“பாடுமீன்களின் சமர் (BATTLE OF SINGING FISH)” எனும் கடின பந்து கிரிகட் சுற்றுப்போட்டி (BIG MATCH )எதிர்வரும் 14ஆம் திகதி (சனிக்கிழமை) மட்/சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பான ஆரம்ப ஏற்பாடுகளுடன் நடைபெறவுள்ளது.

உணர்வுபூர்வமாகவும் குதூகலத்துடனும் இவ் விறுவிறுப்பான  போட்டியினை ரசிப்பதற்காகவும், அணிகளை உற்சாகப்படுத்துவதற்காகவும் அணிதிரளும் ஆதரவாளர்களே !
கடின உழைப்புடன் கூடிய பயிற்சிகளின் பின் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரிக்கும் கனவுடன் பலப் பரீட்சையில் மோதவிருக்கும் இரு அணிவீரர்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைத்து சமூகங்களின் நேர்த்தியான வேண்டுகோள் ஆகும்.