தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார 10.05.2016 மாலை திருக்கதவு திறத்தல் உற்சவம் இடம்பெறும்


(லியோ)

மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின்  திருக்கதவு  திறத்தல்  வைபவம் நாளை மாலை இடம்பெறும் .


கிழக்கிலங்கையின் சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றான மட்டக்களப்பு தாண்டவன்வெளி குளக்கட்டு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்  நாளை  10ஆம் திகதி  செவ்வாக்கிழமை மாலை  திருக்கதவு  திறத்தல்  உற்சவத்துடன்  பெருவிழா ஆரம்பமாகி எதிர்வரும் 21.05.2016 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி ஆலய வருடாந்த உற்சவம் இனிதே  நிறைவுபெறும் .

ஆலய உற்சவ காலங்களில் தினமும் நண்பகல் விசேட பூசைகளும் மாலை அபிஷேக அலங்கார பூசைகள்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிதம்பர சாந்தரூபக் குருக்கள் தலைமையில் இடம்பெறும் .

ஆலய உற்சவத்தின் 5தாம் நாள் சடங்கு  14.05.2016  சனிக்கிழமை மாலை கல்யாணக் கால் வெட்டும் சடங்கு இடம்பெற்று வழமையான வீதியூடாக அம்பாள் ஊர்காவல் பண்ணும் நிகழ்வும் இடம்பெறும் .

 19.05.2016 வியாழக்கிழமை அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று   21.05.2016 சனிக்கிழமை அதிகாலை திருக்குளிர்த்தி பாடி அம்பாளின் உற்சவம் இனிதே நிறைவு பெரும் .