மட்டு.பெரியபோரதீவு காட்டுப் பாலத்தடி பகுதியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள காட்டுப் பாலத்தடி பகுதியில் இருந்து இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலம் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதாக களுவாஞ்சிகுடி பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கர வண்டியும் குறித்த சடலத்திற்கு அருகில் காணப்படுவதாகவும் துவிச்சக்கர வண்டியில் குறித்த வீதியில் பயணிக்கும்போது பாலத்திற்குள் வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவு கிடைக்கப் பெற்றதும் சடலம் மீட்கப்படும் எனவும், அதுவரையில் குறித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.