(லியோ)
சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு மட்டக்களப்பு அமிர்தகழி இளைஞர் கழகத்தினால் நடத்தப்பட்ட சித்திரை புதுவருட
கலை ,கலாசார விளையாட்டு
நிகழ்வுகள் மட்டக்களப்பு -
அமிர்தகழி கண்ணகியம்மன் ஆலய முன்றலில்
நேற்று மாலை இடம்பெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட அமிர்தகழி கிராம சேவை பிரிவின் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு
செய்யப்பட தமிழ் சிங்கள சித்திரை புதுவருட
பாரம்பரிய கலை , கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள்
நேற்று மாலை
மட்டக்களப்பு அமிர்தகழி
கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நேற்று மாலை
மிக சிறப்பாக இடம்பெற்றது .
இடம்பெற்ற சித்திரை புதுவருட கலை ,கலாச்சார விளையாட்டு நிகழ்வில் பாரம்பரிய கலாசார விளையாட்டு நிகழ்வாக ,தலையணை சமர் , முட்டி உடைத்தல் , வலுக்கு மரம்
ஏறுதல் ,
தேசிக்காய் கரண்டி ஓட்டம் என சிறுவர்கள்
மற்றும் பெரியவர்களுக்கான பல பாரம்பரிய கலாசார வினோத விளையாட்டு நிகழ்வுகள்
இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு அமிர்தகழி கிராம பொதுமக்கள் ,பாடசாலை
சிறுவர்கள் என பலர் கலந்து சித்திரை புதுவருட விளையாட்டு நிகழ்வை சிறப்பித்தனர் .
இந்நிகழ்வில்
பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர
ஆணையாளர் எம் . உதயகுமார் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச் .கே .டி .ஹெட்டிஹாரச்சி , அமிர்தகழி கிராம
சேவை உத்தியோகத்தர் செல்வி எஸ் . தர்ஷினி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்
திருமதி . வனஜா ,மண்முனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி .பி . பிரசாந்தினி மாவட்ட இளைஞர்
சேவைகள் மன்ற உத்தியோகத்தர் திருமதி . அருள்மொழி , அமிர்தகழி கிராம அபிவிருத்தி குழு தலைவர்
மருதலிங்கம் மற்றும் அமிர்தகழி இளைஞர்
கழக
உறுப்பினர்கள் , அமிர்தகழி கிராம பொதுமக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர் .