மாநகர சபையினால் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு சிரமதான பணிகள்

(லியோ)

 மட்டக்களப்பு மாநகர சபையினால் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு  சிரமதான பணிகள் மட்டக்களப்பு மாநகர பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


  மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் தலைமையில்  மட்டக்களப்பு மாநகர பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு சிரமதான பணியில்   ஏறாவூர்  நகர சபை , மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு , பொதுசுகாதார பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை   ஆகியன இணைந்து சுத்திகரிப்பு சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளன .

இதன் கீழ் இன்று  மட்டக்களப்பு கோட்டமுனை பகுதியில் உள்ள பிரதான வடிகான்  பகுதியில் சுத்திகரிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன .
  .  
 இன்று இடம்பெற்ற சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம் ,உதயகுமார் , பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , ஏறாவூர்  நகர சபை  ஊழியர்கள் , மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் , பொதுசுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்   கலந்துகொண்டனர் .