(லியோ)
மட்டக்களப்பு மாநகர சபையினால் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு சிரமதான பணிகள் மட்டக்களப்பு மாநகர
பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
மட்டக்களப்பு
மாநகர ஆணையாளர் எம் .உதயகுமார் தலைமையில்
மட்டக்களப்பு மாநகர பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொத்தணி முறையிலான
சுத்திகரிப்பு சிரமதான பணியில் ஏறாவூர் நகர சபை , மட்டக்களப்பு பொலிஸ்
பிரிவு , பொதுசுகாதார பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஆகியன
இணைந்து சுத்திகரிப்பு
சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளன .
இதன் கீழ் இன்று மட்டக்களப்பு கோட்டமுனை பகுதியில் உள்ள பிரதான
வடிகான் பகுதியில்
சுத்திகரிப்பு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன .
.
இன்று இடம்பெற்ற சிரமதான பணியில் மட்டக்களப்பு
மாநகர ஆணையாளர் எம் ,உதயகுமார் , பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , ஏறாவூர் நகர சபை ஊழியர்கள் , மட்டக்களப்பு மாநகர சபை
ஊழியர்கள் , பொதுசுகாதார பிரிவு உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு பொலிஸ் நிலைய
உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர் .