இருதயபுரம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை அவரது வீட்டின் அறையில் இருந்து சடலமாக மீக்கப்பட்டுள்ளார்

(லியோ)

மட்டக்களப்பு  இருதயபுரம்  பகுதியில்   மூன்று பிள்ளைகளின் தந்தை   அவரது வீட்டில் இருந்து உடல் காயங்களுடன் சடலமாக மீக்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .  

 மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இருதயபுரம் மேற்கு, இலக்கம் 63/7, 10ஆம் குறுக்கு வீதி பகுதியில் வசித்து வரும்  வேலுப்பிள்ளை புஸ்பாகரன் வயது 51   மூன்று பிள்ளைகளின் தந்தை 25.04.2016  திங்கட்கிழமை காலை அவரது வீட்டின் அறையில்  இருந்து உடல் காயங்களுடன் சடலமாக மீக்கப்பட்டுள்ளதாக   மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .  

சம்பவம் இடம்பெற்ற முதல் நாள் இரவு  குறித்த நபர்  மதுபோதையில்   தனது மகன் மார் மற்றும் அயலவருடன்  கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர் 

சடலமாக மீட்க்கப்பட்டவரின் மரணம்  தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு குற்றபுலனாய்வு அதிகாரிகள்   விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்  .