மட்டக்களப்பு புத்தூர் , 6ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீட்டு வளாகத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது

 (லியோ)

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு  புத்தூர் பகுதி , 6ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீட்டு வளாகத்தில் இருந்து  மூன்று கைக்குண்டுகள்     மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்  தெரிவித்தனர் .


 மட்டக்களப்பு  புத்தூர் (புதுநகர்)  கிராம சேவை பிரிவின்   , 6 ஆம் குறுக்கு , இலக்கம்,  42/10,A வீதியில்  வசிக்கும் வைரபெருமாள் பரமேஸ்வரன்    என்பவரது  வீட்டு வளாகத்தில் நேற்று மாலை குடிநீர் குழாய் பதிப்பதற்காக   மண் அகழ்வு செய்யும் போது மூன்று கைக்குண்டுகள் காணப்பட்டதை   அவதானித்த  வீட்டு உரிமையாளரினால்  மட்டக்களப்பு பொலிசாருக்கு  தகவல் வழங்கியதாக  மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

   குறித்த கைக்குண்டுகள் தொடர்பாக்க  மட்டக்களப்பு பொலிசாருக்கு  தகவல் வழங்கியதன் பின் குறித்த இடத்துக்குச் சென்ற மட்டக்களப்பு பொலிஸார்  மீட்கப்பட்ட  கைக்குண்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு  வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .