மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு புத்தூர்
பகுதி , 6ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீட்டு வளாகத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்
.
மட்டக்களப்பு புத்தூர்
(புதுநகர்) கிராம சேவை பிரிவின் , 6 ஆம்
குறுக்கு , இலக்கம், 42/10,A வீதியில்
வசிக்கும் வைரபெருமாள் பரமேஸ்வரன் என்பவரது வீட்டு வளாகத்தில் நேற்று மாலை குடிநீர் குழாய் பதிப்பதற்காக
மண் அகழ்வு செய்யும் போது மூன்று கைக்குண்டுகள்
காணப்பட்டதை அவதானித்த வீட்டு உரிமையாளரினால் மட்டக்களப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .
குறித்த கைக்குண்டுகள் தொடர்பாக்க மட்டக்களப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியதன் பின் குறித்த இடத்துக்குச்
சென்ற மட்டக்களப்பு பொலிஸார் மீட்கப்பட்ட கைக்குண்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .