மட்டக்களப்பில் யுவதியின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறையில் உள்ள விடுதி ஒன்றில் இருந்த யுவதி ஒருவர் நீர்குழி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
திருப்பெருந்துறையில் உள்ள விடுதி ஒன்றில் இருந்து தொழில்பயிற்நெறியை மேற்கொண்டுவந்த களுவாஞ்சிகுடி,எருவில் பகுதியை சேர்ந்த ராமதாஸ் சுலோக்ஸனா (17வயது)என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விடுதியில் உள்ளவர்கள் குறித்த யுவதியை காணாது தேடியபோது அருகில் உள்ள நீர்க்குழியில் கிடந்துள்ளதை கண்டுள்ளனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார் சடலத்தினை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.