(லியோ)
மட்டக்களப்பு திருப்பெருந்துறை மரண ஆதார உதவும் உள்ளங்கள் அமைப்பின்
ஏற்பாட்டில் மயானத்தினை கிராம மக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து துப்பரவு செய்யும் சிரமதான
பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு திருப்பெருந்துறை
மரண ஆதார உதவும் உள்ளங்கள் அமைப்பின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு திருப்பெருந்துறை கிராம மக்களும் கிராம சிவில் பாதுகாப்பு குழு
உறுப்பினர்கள் இணைந்து திருப்பெருந்துறை கிராம சேவை பிரிவில்
உள்ள மானத்தினை துப்பரவு செய்யும்
பணிகளை இன்று மேற்கொண்டனர் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு
பொலிஸ் பிரிவு சிவில் பாதுகாப்பு குழு தலைவர்
ஸ்டீபன் ராஜன் ,சமுர்த்தி
உத்தியோகத்தர் எஸ் . ஸ்ரீதரன் , பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்
.விஜயகுமார் , கிராம சேவை உத்தியோகத்தர் லிங்கநாதன் மற்றும் கிராம அபிவிருத்தி
குழு உறுப்பினர்கள் , கிராம மரண ஆதார உதவும் உள்ளம் குழு உறுப்பினர்கள் ஆகியோர்
இந்த சிரமதான பணியில் கலந்துகொண்டனர்