குருத்தோலை ஞாயிறு தின விசேட திருப்பலி மரியாள் பேராலயத்தில் இடம்பெற்றது


(லியோ)

இன்று குருத்தோலை ஞாயிறு தினமாகும் . இன்றைய நாளில்  உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்றன .


 இந்நிகழ்வானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலேம் நகரில்  நடந்த நிகழ்வாகும் .

இன்றைய நாளை  உலகில் உள்ள அணைத்தது கிறிஸ்தவர்களும் விசேட விதமாக நினைவு கூர்ந்து வருகின்றனர்.  .

கிறிஸ்தவர்களின்  புனித நாட்களில் மிக முக்கிய நாட்களாக குருத்தோலை ஞாயிறு தினமாகும் அமைகின்றது.

இந்நாளை நினைவு கூறும் முகமாக  மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் இன்று அதிகாலை மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட திருப்பலி இடம்பெற்றது .

இத்திருப்பலியில்  அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் மற்றும் பங்கு மக்களும் கலந்துகொண்டனர் .