இறை இரக்கத்தின் ஆண்டின் முதல் ஆலயமாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் கட்டுவதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு

(லியோ)

2016 ஆம் ஆண்டினை  திருத்தந்தை பிரான்சிஸ்  இரக்கத்தின் ஆண்டாக பிரகடனம் படுத்தியுள்ளார்.


இந்த இறை இரக்கத்தின் ஆண்டினை பிரதிபலிக்கும் வகையில் இறை இரக்கத்தின் ஆலயம் கட்டுவதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் இறை இரக்கத்தின் ஆண்டினை  பிரதிபலிக்கும் வகையில் இலங்கையில் இறை இரக்கத்தின் ஆண்டின் முதல் ஆலயமாக மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கெவன் எஸ்டேட் பகுதியில் ஆலயம்   கட்டுவதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர்  பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் இன்று   இடம்பெற்றது . இதனை தொடர்ந்து  அந்த வளாகத்தில்  குருக்களுக்கான ஒய்வு இல்லம் கட்டுவதற்கான அடிகள்ளும் நாட்டப்பட்டது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் , மற்றும் பொது நிலையினர் கலந்துகொண்டனர் . 


இந்த இறை இரக்கத்தின் ஆலய நிர்மான பணிகள் அனைத்தும் பொது நிலையினரின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு எதிர் வரும் நவம்பர் மாதம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது .