மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இயேசு ஜீவிக்கிரார் சர்வதேச ஊழியத்தின் 38வது சுவிசேஷ மாநாடு

இயேசு ஜீவிக்கிரார் சர்வதேச ஊழியத்தின் 38வது சுவிசேஷ மாநாடு மட்டக்களப்பு இந்துக்கல்லூரிய மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் நேற்று இரவு ஆரம்பமானது.
ஆசிர்வாதப்பெருவிழா என்னும் தலைமைபில் இயேசு ஜீவிக்கிரார் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றும் இந்த நிகழ்வில் திருமதி கலாநிதி எம்.ஆர்.இராஜேந்திரம் மற்றும் சி.வி.இராஜேந்திரம் ஆகியோரும் பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொண்டனர்.

நேற்று 18ஆம் திகதி ஆரம்பமான இந்த மாநாடு இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.00மணி தொடக்கம் நடைபெறும்.

இந்த38வது சுவிசேஷ மாநாட்டுக்கு நாடும் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.