(லியோ)
இன்று பெண்கள் கல்வியிலும் , தொழில் துறையிலும் , அரசியலிலும் , நிர்வாக
துறையிலும் தடம்பதித்து வருகின்றார்கள் . சர்வதேச மகளிர் தின நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் தெரிவித்தார் .
மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியும் ,காவியா பெண்கள் அமைப்பும்
இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில்
இடம்பெற்றது. நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
சிறந்த பெண் நிர்வாகிகளாக சேவையாற்றுகின்ற பெண்கள் கௌரவிக்கப்பட்டனர் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தின்
சிறந்த பெண் நிர்வாகியாக மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ் .சார்ள்ஸ் உட்பட
கல்விக்கான சிறந்த பெண் நிர்வாகிகளாக பாடசாலை
அதிபர்கள் , பிரதேச செயலகத்தின் சிறந்த பெண் நிர்வாகிகளாக பிரதேச செயலாளர்கள் ,
கல்வி விரிவுரையின் சிறந்த பெண் நிர்வாகிகளாக விரிவுரையாளர்கள்
,பொது அமைப்புகளின் சிறந்த பெண் நிர்வாகிகளாக அமைப்புக்களின் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்
.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா
ஜோசப் ஆண்டகை கலந்துகொண்டார் .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய மட்டக்களப்பு
மறை மாவட்ட ஆயர் தெரிவிக்கையில் ஆண்
ஆதிக்கம் என்று சொல்லப்பட்ட காலத்தில் பெண்கள் சமூகத்திலே இரண்டாம் தரமாக
கணிக்கப்பட்டார்கள் .
அந்த கருத்தியல் காரணமாக அன்று
பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள் . அப்போது ஆண் ஆதிக்கம் நிலவியது . அப்போது
பாலின பாகுபாடு பார்த்தார்கள் , பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரிக்கப்பட்டன ,பெண்கள்
குழந்தைகள் வேண்டாம் என்ற ஒரு நிலை வந்தது , அதன் விளைவாக அன்று கருகலப்புகள் அதிகமாக
செய்யப்பட்டன . பெண் சிசுக்கள் சிசுவிலே கொள்ளப்பட்டன .
இந்நிலை மாறி இந்த 21ஆம் நுற்றாண்டில் இதில் இருந்து விடுபட்டு ஒரு விழிப்புணர்வு
ஏற்படுத்தபட்டு வருகின்ற வேளையில் பெண்ணியலாளர்கள் ,சமூக ஆள்வளர்கள் அதிக
விடமுயற்சியின் பயனாக பெண்களுக்கான அமைப்புகள் உருவாக்கப்பட்டு பெண் விடுதலைக்காக
போராடினார்கள் .
அதன் விளைவாக இன்று பெண்கள் சமூகத்தில் முக்கியத்தும் பெறுகின்றார்கள்
. இன்று பெண்கள் கல்வியிலும் , தொழில் துறையிலும் , அரசியலிலும் , நிர்வாக
துறையிலும் தடம்பதித்து வருகின்றார்கள் . இவ்வாறான பெண்கள் இன்று சமூக மட்டத்திலும் சமூக சேவைகளிலும் சிறந்த முறையில் சமூகத்திற்கு சேவையாற்றி
வருகின்றனர் . இவ்வாறு சிறந்த முறையில் சேவையாற்றி சிறந்த பெண் நிர்வாகிகளாக கௌரவிக்கப்படுகின்றமை
சிறந்த விடயமாகும் .
இவ்வாறான நிகழ்வுகள் சர்வதேச
பெண்கள் தினத்தில் மட்டும் நடைமுறை படுத்தாமல் தொடர்ந்து பெண்கள் கௌரவிக்கப்பட
வேண்டும் .
அன்றைய நிலை மாறி பெண்களுக்கு சமத்துவம் கொடுக்கின்ற நிலை வரவேண்டும்
என இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் தெரிவித்தார் .