மட்டு - டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீடத்தில் முதல் திருப்பலி ( VIDEO & PHOTOS )

(லியோ)


மட்டக்களப்பு டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தின் புதிய கல்வாரி பீடத்தில் முதல் திருப்பலி 22.03.2016 ஒப்புகொடுக்கப்பட்டது .

மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடம் அருட்தந்தை ஜோசெப் மேரி தலைமையில் அர்சிக்கப்பட்டு முதல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது .

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கல்வாரி பீடத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியில் அருட்தந்தை ஜோசெப் மேரி ,   பங்கு தந்தை யேசு சபை துறவி ரொஷான் ,இருதயபுரம் பங்குதந்தை அருட்பணி ஜெகாந்தன் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர்  .


 இந்த விசேட திருப்பலியில் பங்கு மக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்