வை.டி.எஸ்.சி.விளையாட்டு கழகத்தின் 34வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் ஓட்ட நிகழ்வு

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி வை.டி.எஸ்.சி.விளையாட்டு கழகத்தின் 34வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் சைக்கிள் ஓட்ட நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி நியூ மோகன் ஸ்ரோஸ் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு களுவாஞ்சிகுடி பிரதான வீதியூடாக கல்முனை நகர் வரை சென்று மீண்டும் களுவாஞ்சிகுடியினூடாக மட்டக்களப்பு வரை சென்று களுவாஞ்சிகுடி நகரை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

களுவாஞ்சிகுடி வை.டி.எஸ்.சி. விளையாட்டு கழகத்தின் 34வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாளைய தினம் மரதன் ஓட்ட நிகழ்வும் விளையாட்டு விழாவும் நடைபெறவுள்ளமை சிறப்பம்சமாகும். \





(நன்றி வாஞ்சிஒளி)