1840 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தன்னாமுனை பகுதியில் வாழ்ந்த முன்னோர்களால் சிறப்பிக்கப்பட்ட நிகழ்வும் வருடாந்த ஆலய திருவிழா திருப்பலியும்

(லியோ)

மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர்  ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி  20.03.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. .

 மட்டக்களப்பு தன்னாமுனை புனித சூசையப்பர்  ஆலய திருவிழா சிறப்பு திருப்பலி  ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு மறைக்கோட்ட குரு முதல்வர் அருட்தந்தை  எ . தேவதாசன் தலைமையில்  திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இத்திருப்பலியினை  பங்கு  தந்தை ரமேஷ் கிறிஸ்டி, தன்னாமுனை மியாமி நிறுவன இயக்குனர் அருட் தந்தை இருதயராஜ்,  ஆகியோர் இணைந்து இத் திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.

இத் திருப்பலியினை தொடர்ந்து ஆலயத்தில் அன்னதான நிகழ்வு இடம்பெற்றது.

இந்த அன்னதான நிகழ்வானது ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 19ஆம் திகதிக்கு அடுத்து  வரும்  ஞாயிறுக் கிழமை  தினத்தில் இவ் ஆலயத்தில் அன்னதானம் வழங்கப்படுகின்றது.

இந் நிகழ்வானது ஆண்டு தோறும்  பங்குனி மாதம் ஆலய திருவிழாவுடன் இடம்பெற்று வருகின்றது.

தன்னாமுனை ஊரில் 1840 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொள்ளை நோயினால் பல குழந்தைகள் இறந்துள்ளார்கள் .

 இந் நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக்கொள்ள  1840 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தன்னாமுனை பகுதியில்  வாழ்ந்த முன்னோர்களால் இவ் ஆலயத்தில் நேர்த்தி கடன் வைக்கப்பட்டு அந்த நேர்த்தி கடனை நிவர்த்தி செய்யும் முகமாக மடிபிச்சை எடுத்து  நேர்த்தி கடனை அன்னதான மூலமாக நிறைவேற்றியதாக  இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றன .


இதனை நினைவு  கூறும் முகமாக  வருடந்தோறும் தன்னாமுனை புனித சூசையப்பர்  ஆலய  பங்கு மக்களினால் இந்த அன்னதான நிகழ்வினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.