வெளியாகியுள்ள 2015 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை முடிவுகளுக்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 26
மாணவர்களும் , புனித சிசிலியா பெண்கள் தேசிய
கல்லூரியில் 12 மாணவிகளும் 9 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் .
இதில் வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 21 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்திகளும் புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியில் 16 மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்
2015 ஆம்
ஆண்டு நடைபெற்ற கா.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றுவித்து சிறந்த பெறுபேறுகளை பெற்ற தமது பாடசாலைக்கு
பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி , வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன .
இந்நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு புனித
சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியிலும் மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர
தேசிய பாடசாலையிலும் இடம்பெற்றது . இந்நிகழ்வுகளில் பாடசாலை அதிபர்களும் ,ஆசிரியர்களும் ,மாணவர்களும்
கலந்துகொண்டனர் .