2015 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களில் A புள்ளிகளை பெற்ற வின்சன்ட் மகளிர் மற்றும் சிசிலியா பெண்கள் பாடசாலை மாணவிகள்

(லியோ)

வெளியாகியுள்ள 2015  ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை முடிவுகளுக்கு அமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் 26 மாணவர்களும் , புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியில் 12  மாணவிகளும்  9 பாடங்களில் ஏ சித்திகளை பெற்றுள்ளனர் .


இதில் வின்சன்ட் மகளிர் உயர்தர  தேசிய பாடசாலையில்  21  மாணவர்கள் 8 பாடங்களிலும் ஏ சித்திகளும் புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியில் 16  மாணவர்கள்  8 பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கா.பொ.த.சாதாரண  பரீட்சைக்கு தோற்றுவித்து  சிறந்த பெறுபேறுகளை பெற்ற தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பாராட்டி , வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன .

இந்நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியிலும்  மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையிலும் இடம்பெற்றது .  இந்நிகழ்வுகளில் பாடசாலை அதிபர்களும் ,ஆசிரியர்களும் ,மாணவர்களும் கலந்துகொண்டனர் .