(லியோ)
மட்டக்களப்பு அமிர்தகழி கிராமிய சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின்
பத்தாவது ஆண்டு நிறைவு விழா இன்று
இடம்பெற்றது .
மட்டக்களப்பு அமிர்தகழி கிராம சேவை பிரிவில்
இயங்கி வரும் சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா சங்கத்தின் தலைவர் ஒய்வு நிலை அதிபர் .க .
இளையதம்பி தலைமையில் அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மண்டபத்தில்
இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா, சிறப்பு அதிதிகளாக மண்முனை வடக்கு
பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர்களான .ப . கலாதேவன் , எஸ் . ஜெயசேகர் , கிராம சேவை
உத்தியோகத்தர் எஸ் . பிரியதர்சினி , மட்டக்களப்பு
அமிர்தகழி ஸ்ரீ சித்திவிநாயகர் மகா வித்தியாலய அதிபர் . என் . தர்மசீலன் , மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய
வண்ணக்கர்கலான எம் . அரசரெத்தினம் , க . நற்குணசிங்கம் , அமிர்தகழி கிராம
அபிவிருத்தி சங்க தலைவர் எம் .
மருதலிங்கம் மற்றும் அமிர்தகழி கிராம சிரேஸ்ட பிரஜைகளின் சங்க உறுப்பினர்கள்
கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வின் போது சிரேஸ்ட
பிரஜைகளினால் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருக்கு பொன்னாடை போர்த்தி
கௌரவிக்கப்பட்டனர் . இதனை தொடர்ந்து இங்கு உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் சிரேஸ்ட பிரஜைகள் இந்த சமுதாயத்தின்
பொக்கிசங்களாகவும் ,வணகத்துக்குரியவர்களாகவும் , மதிக்கப்படவேண்டியவர்களாகவும் சமுதாயத்தில்
உள்ள ஒவ்வொருவருக்கும் மனநிலை மாறுமாக இருந்தால் அந்த சமுதாயம் மதிக்கத்தக்க
சமுதாயமாக உருவாகும் .
இந்நிலையினை இளம் சமூக மத்தியிலும் இந்த சமுதாயத்திலும் முதியவர்கள் மதிக்க படுபவர்களாக வழிநடத்த இளம் வயதினரை உருவாக்க வேண்டும் என
தெரிவித்துக்கொண்டார் .