(லியோ )
“ மைத்திரி ஆட்சி நிலையான நாடு “
போதைப்பொருளிலிருந்து விடுபட்ட நாடு போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 2016 நாடளாவியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மாதிரிக் கிராம வேலைத்திட்டத்தின்
போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்
நாடளாவியல் ரீதியில் ஆரம்பிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது .
இதன் ஒரு திட்டம் வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி மன்றம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக இணைந்து விசேட
மாதிரி கிராம போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தினை திராய்மடு கிராமசேவை பிரிவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில்
மாதிரி கிராம அபிவிருத்தி திட்டத்தில் போதைப்பொருள்
ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம் 2016 “ போதையற்ற கிராமங்கள்
உருவாக்க உறுதிபூணுவோம் “ எனும்
தொனிப்பொருளில் ஆரம்ப நிகழ்வு இன்று திராய்மடு
கொலனி கிராம சேவை பிரிவில் இடம்பெற்றது .
இதன் போது போதைப்பொருள்
தொடர்பான விழிப்புணர்வு அறிவூட்டல்களும் தொடர்ந்து வீடு வீடாக சென்று போதைப்பொருள் தொடர்பான
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் , ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டது .
இந்நிகழ்வில் அதிதிகளாக திவிநெகும திணைக்கள மாவட்ட பணிப்பாளர் பி
.குணரட்ணம், மாவட்ட செயலக திவிநெகும
முகாமையாளர் எம் . மனோகிதராஜ் ,
திவிநெகும திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி கே . நிர்மளா. ,மண்முனை வடக்கு பிரதேச
செயலக சமுர்த்தி அபிவிருத்தி
உத்தியோகத்தர் . எஸ் . விஜெகுமார் ,இருதயபுரம்
வங்கி முகாமையாளர் திருமதி .கே .சுவந்தினி , இருதயபுரம் வலய
உதவியாளர் .டி .பிரபாகரன் , இருதயபுரம் வலய வங்கி சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , வலய
திவிநெகும உத்தியோகத்தர் இ .காண்டீபன், கிராம சேவை உத்தியோகத்தர் எ .நேசதுரை மற்றும்
திராய்மடு கிராம அபிவிருத்தி குழு
உறுப்பினர்கள் ,சமுர்த்தி சங்கங்களில்
பயனாளிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்,