வலயக்கல்வி அலுவலகம் அனுசரணையில் வித்தியா சஞ்சிகை வெளியிடும் நிகழ்வு

(லியோ)

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் அனுசரணையில் 06வது மலராக  வித்தியா சஞ்சிகை வெளியிடும் நிகழ்வு இன்று இடம்பெற்றது .


மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் அனுசரணையில் 06வது மலராக  வித்தியா சஞ்சிகை வெளியிடும் நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன்  தலைமையில்  மட்டக்களப்பு வின்சட் மகளிர் தேசிய பாடசாலை   பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .

வித்தியா சஞ்சிகையானது  கல்விசார் சிந்தனைகள் ,கலாசாரம் நோக்குடன் இலக்கியப் படைப்புக்கள்  உள்ளடக்கியதாக எழுதப்பட்ட 06வது சஞ்சிகையாகும் .

 இந்த சஞ்சிகையினை இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு  முதல் பிரதிகளை வழங்கி வெளிடப்பட்டது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி  அ. யோகராஜா ,கௌரவர அதிதியாக ஒய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி . ம . சீவரெத்தினம்  , சிறப்பு அதிதிகளாக  ஒய்வு நிலை சிரேஷ்ட  சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான  அருமைநாயகம் , திருமதி  டி . பாலசுப்பிரமணியம் , திருமதி . ஆர் . பாலசுப்பிரமணியம் , திருமதி . எம் . கனகரெட்ணம் , திருமதி எம் . இருதயநாதன் மற்றும் வலயக்கல்வி அலுவலக கல்வி அதிகாரிகள் , ஆசிரியர் ஆலோசகர்கள் ,வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .