(லியோ)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் அனுசரணையில் 06வது
மலராக வித்தியா சஞ்சிகை வெளியிடும்
நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் அனுசரணையில் 06வது
மலராக வித்தியா சஞ்சிகை வெளியிடும்
நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில்
மட்டக்களப்பு வின்சட் மகளிர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
வித்தியா சஞ்சிகையானது
கல்விசார் சிந்தனைகள் ,கலாசாரம் நோக்குடன் இலக்கியப் படைப்புக்கள் உள்ளடக்கியதாக எழுதப்பட்ட 06வது
சஞ்சிகையாகும் .
இந்த சஞ்சிகையினை
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு முதல் பிரதிகளை வழங்கி வெளிடப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருமதி
அ. யோகராஜா ,கௌரவர அதிதியாக ஒய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி
. ம . சீவரெத்தினம் , சிறப்பு
அதிதிகளாக ஒய்வு நிலை சிரேஷ்ட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்களான அருமைநாயகம் , திருமதி டி . பாலசுப்பிரமணியம் , திருமதி . ஆர் .
பாலசுப்பிரமணியம் , திருமதி . எம் . கனகரெட்ணம் , திருமதி எம் . இருதயநாதன்
மற்றும் வலயக்கல்வி அலுவலக கல்வி அதிகாரிகள் , ஆசிரியர் ஆலோசகர்கள் ,வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர் .