(லியோ )
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர்
விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் இன்று
ஆரம்பமானது .
மட்டக்களப்பு கல்வி வலயதிற்குட்பட்ட மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட
பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர். எ .
சுகுமாரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை
மைதானத்தில் ஆரம்பமானது .
இன்று ஆரம்பமான மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள் மண்முனை
வடக்கு கல்வி கோட்ட விளையாட்டு குழு தலைவர் கே மனோராஜ் மற்றும் செயலாளரின்
வி , மோகன்குமார் ஒழுங்கமைப்பில் 120
விளையாட்டு போட்டி நிகழ்வுகளை கொண்டதாக சுமார் 600 மாணவர்கள்
கலந்துகொண்டுள்ள மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன
.
இந்த மெய்வல்லுனர் விளையாட்டு
போட்டி நிகழ்வுகள் 29.02.2016 திங்கள் கிழமை முதல் எதிர்வரும் 02.03,2016 புதன்கிழமை
வரை தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை
மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .