மண்முனை வடக்கு கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள்

(லியோ )

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட  பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள்  இன்று ஆரம்பமானது .


மட்டக்களப்பு கல்வி வலயதிற்குட்பட்ட  மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள்  மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர். எ . சுகுமாரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது .  

இன்று ஆரம்பமான மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகள்  மண்முனை  வடக்கு கல்வி கோட்ட விளையாட்டு குழு தலைவர் கே மனோராஜ் மற்றும் செயலாளரின் வி , மோகன்குமார்  ஒழுங்கமைப்பில்   120 விளையாட்டு போட்டி நிகழ்வுகளை கொண்டதாக சுமார்  600  மாணவர்கள் கலந்துகொண்டுள்ள மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .


இந்த  மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நிகழ்வுகள்  29.02.2016 திங்கள் கிழமை முதல் எதிர்வரும்  02.03,2016 புதன்கிழமை வரை தொடர்ந்து மூன்று நாட்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .