மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுவரித்திணைக்களத்தின் நடவடிக்கையினை விஸ்தரிக்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

சகல வசதிகளும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த மதுவரித்திணைக்களத்தின் அலுவலகத்தின் கட்டிடத்திற்காக 40மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

இதன் அடிக்கல் நடும் நிகழ்வு மதுவரித்திணைக்களத்தின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் ஏ.மோதரகம,ஆணையாளர்(நிர்வாகம் காமினி மா கமகே, மதுவரித்திணைக்களத்தின் கிழக்கு மாகாண உதவி ஆணையாளர் கே.எம்.ஜி.பண்டார,அம்பாறை-மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் எம்.சுசாதரன்,மட்டக்களப்பு மாவட்ட அத்தியட்சர் என்.சோதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதுவரித்திணைக்களத்தின் சேவையினை விஸ்தரிக்கும் வகையில் இந்த நவீன வசதிகளுடனான கட்டிடம் அமைக்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அத்தியட்சர் என்.சோதிநாதன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மதுவரித்திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள்,பொறுப்பதிகாரிகள் எனபலர் கலந்துகொண்டனர்.