உலக தாய்மொழி தின நிகழ்வுகள்

(என்டன்)

உலக தாய்மொழி தின நிகழ்வுகள்  நாளை மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெறவுள்ளது .

உலக தாய்மொழி தினம் நிகழ்வின் போது  தெலுங்கர்  ,பறங்கியர் , வேடர் சமூகங்களின் ஆற்றுகை காட்சிப்படுத்தல்  மற்றும் கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு பட்ட கலாசார நிகழ்வுகள் நாளை காலை 09.00 மணி முதல்  மாலை 08.00  மணி  வரை இடம்பெறவுள்ளன .

 இந்நிகழ்வில் மட்டக்களப்பு வாகரை  அம்மந்தனாவெளி  களுவங்கேணி வேடர்  சமூகத்தினர்  , அளிகம்பை தெலுங்கர் மற்றும்  மட்டக்களப்பு பறங்கியர் சமூகத்தினர் பங்கெடுக்க உள்ளனர் .

நாளை இடம்பெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஊடக சந்திப்பு இன்று மாலை  கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி . ஜெயசங்கர் தலைமையில் நிறுவகத்தில் இடம்பெற்றது,


இந்த சந்திப்பு நிகழ்வில் போது நிகழ்வின் இணைப்பாளர்  கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் திருமதி . உமா ஸ்ரீசங்கர் , நிருவாக மாணவர்கள் , ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் .