(லியோன்)
வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பலவீனங்களை இனங்கண்டு சங்கங்களை பலப்படுத்தல் எனும் அறிவூட்டல் செயலமர்வு மட்டக்களப்பு இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட
கூட்டுறவுச் சபையும் , கூட்டுறவுத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் பலநோக்கு ,
இரண்டாம் தர சங்கங்களினது தலைவர் ,இயக்குனர் , பொதுமுகாமையாளர் ஆகியோர்களுக்கான வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை
மேற்கொள்ளல் மற்றும் பலவீனங்களை இனங்கண்டு சங்கங்களை பலப்படுத்தல் எனும் தலைப்பில்
அறிவூட்டல் செயலமர்வு மாவட்ட கூட்டுறவு
சபை தலைவர் ஆர் .ராயப்பு தலைமையில் இன்று
மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
கிழக்குமாகான விவசாய ,நீர்ப்பாசன ,கால்நடை ,மீன்பிடி ,கூட்டுறவு உணவு வழங்கல்
அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,அமைச்சின் செயலாளர்
கே . சிவநாதன் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைக்குழு தலைவரும் ,பாராளுமன்ற
உறுப்பினருமான ஞா .ஸ்ரீநேசன் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைக்குழுவின்
பிரதி தலைவரும் .பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அமீர் அலி , பாராளுமன்ற
உறுப்பினர் எஸ் .யோகேஸ்வரன் ,
கிழக்குமாகான கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி .கே . ராஜனி , மட்டக்களப்பு கூட்டுறவு
அபிவிருத்தி உதவி ஆணையாளர் எஸ் .
கிருபைராசசிங்கம் ,கிழக்கு மாகான கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் .திவாகா சர்மா
மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை முகாமையாளர்கள் கலந்துகொண்டனர் ..
இந்நிகழ்வின் போது
மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை முகாமையாளர்களினால் நிகழ்வில் கலந்துகொண்ட
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்