பலநோக்கு கூட்டுறவுச்சங்க பொதுமுகாமையாளர்களுக்கான அறிவூட்டல் செயலமர்வு இன்று இடம்பெற்றது

(லியோன்)


 வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பலவீனங்களை இனங்கண்டு சங்கங்களை பலப்படுத்தல் எனும்  அறிவூட்டல் செயலமர்வு  மட்டக்களப்பு  இடம்பெற்றது .
 மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவுச் சபையும் , கூட்டுறவுத் திணைக்களமும் இணைந்து நடாத்தும் பலநோக்கு , இரண்டாம் தர சங்கங்களினது தலைவர் ,இயக்குனர் , பொதுமுகாமையாளர் ஆகியோர்களுக்கான  வளங்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் பலவீனங்களை இனங்கண்டு சங்கங்களை பலப்படுத்தல் எனும் தலைப்பில் அறிவூட்டல் செயலமர்வு  மாவட்ட கூட்டுறவு சபை தலைவர் ஆர் .ராயப்பு தலைமையில்  இன்று மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் கிழக்குமாகான விவசாய ,நீர்ப்பாசன ,கால்நடை ,மீன்பிடி ,கூட்டுறவு உணவு வழங்கல் அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,அமைச்சின் செயலாளர்  கே . சிவநாதன் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைக்குழு தலைவரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான ஞா .ஸ்ரீநேசன் , மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி இணைக்குழுவின் பிரதி தலைவரும் .பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அமீர் அலி , பாராளுமன்ற உறுப்பினர் எஸ் .யோகேஸ்வரன் ,  கிழக்குமாகான கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்  திருமதி .கே . ராஜனி , மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்  எஸ் . கிருபைராசசிங்கம் ,கிழக்கு மாகான கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் .திவாகா சர்மா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை முகாமையாளர்கள் கலந்துகொண்டனர்  ..



இந்நிகழ்வின் போது மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபை முகாமையாளர்களினால் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்