மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகிலி வெட்டை - சந்திவெளி வாவிக் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணியொன்றைத் திருடிச் சென்றனர் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மூவரை ஞாயிறன்று தாம் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
திகிலிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த மீனவரான கந்தையா பாக்கியராசா என்பவரின் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தேணியே திருடப்பட்டு வாவியில் சகதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொலிஸாரால் கண்பிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வாசை;சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையார் கோயில் வீதி கிண்ணையடியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோணி வாவிக் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது இந்த நபர்கள் மூவரும் இரவு வேளையில் தோணியைத் திருடிக் கொண்டு சென்றுவிட்டதாக தோணி உரிமையாளர் பொலிஸில் முறையிட்டு சில மணிநேரங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
திகிலிவெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த மீனவரான கந்தையா பாக்கியராசா என்பவரின் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தேணியே திருடப்பட்டு வாவியில் சகதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பொலிஸாரால் கண்பிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக வாசை;சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிள்ளையார் கோயில் வீதி கிண்ணையடியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தோணி வாவிக் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது இந்த நபர்கள் மூவரும் இரவு வேளையில் தோணியைத் திருடிக் கொண்டு சென்றுவிட்டதாக தோணி உரிமையாளர் பொலிஸில் முறையிட்டு சில மணிநேரங்களில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.