அரச சேவை உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நிகழ்வு


(லியோன் )

சிறந்த நாளைய தினத்தினை தீர்மானிப்பதற்கான பணியாற்றும் மனோநிலையினையும் , மாற்றத்தினையும் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படுத்தும் அவசியத்தினை தெளிவு படுத்தி 2016 ஆம் ஆண்டின் சத்தியப் பிரமாணம்  மாவட்ட  செயலகத்தில் இடம்பெற்றது .

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் இந் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும்  புதிய ஆண்டின்  ஆரம்பத்தில் காலடி வைக்கின்ற இன்றைய முதல் நாளில் அரச  சேவை உத்தியோகத்தர்கள் சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும்  நிகழ்வு அனைத்து திணைக்களங்களிலும் திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் இன்று நாடளாவியல் ரீதியில் இடம்பெறுகின்றது .


இதன் பிரதான நிகழ்வானது ஜனாதிபதி செயலக செயலாளர்களின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற  வேளையில்  அதன் ஒரு நிகழ்வு  மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான  பி .எஸ் .எம் .சார்ள்ஸ்  தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் மிக சிறப்பாக இன்று இடம்பெற்றது .


ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து அனைத்து உத்தியோத்தர்களும் தமது சத்தியப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .


 புதிய ஆண்டில் இலங்கை வாழ் மக்களுக்கு புதிய தொரு பொருளாதார மற்றும் புதிய சமுதாய பாதையினை திறந்து இன்றைய நாள் முதல் சிறந்த நாளைய தினத்தினை தீர்மானிப்பதற்கான பணியாற்றும் மனோநிலையினையும் , மாற்றத்தினையும் சகல உத்தியோகத்தர்களுக்கும் ஏற்படுத்தும் அவசியத்தினை தெளிவு படுத்தி 2016 ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று அனைத்து மாவட்ட செயலங்களிலும் , அனைத்து திணைக்களங்களிலும் திணைக்கள தலைவர்களின் முன்னிலையில் உத்தியோகத்தர்கள் தமது உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர் .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .