(லியோன்)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் நடாத்தும் சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு
இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் நடாத்தும் சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தின நிகழ்வு
“ உட்படுத்தலின் ஊடாக மக்களின் அனைத்து ஆற்றல்களுக்கும் இடமளித்து வலுவூட்டுவோம் “ ‘ எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு மகாஜன கல்லூரி
மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு விவேகானந்தா பெண்கள் கல்லூரி
கல்விக்கான ஆலோசகர் என் . இதயராஜன் , கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட
செயலக மேலதிக அரசாங்க
அதிபர்
எஸ் . கிரிதரன் , சிறப்பு
விருந்தினராக
மட்டக்களப்பு
சமூக சேவைகள்
திணைக்கள
மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி மற்றும் விசேட கல்வி
இணைப்பாளர் எம் . தயானந்தன் , வலயக்கல்வி உதவி கல்விப் பணிப்பார்கள் ,பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் , அலுவலக அதிகாரிகள் ஆகியோர்
கலந்துகொண்டனர் .
இந்நிகழ்வின் போது பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாற்றுத்திரனாளிகளையும் , மட்டக்களப்பு கல்வி வலயத்தில் கடமையாற்றும் மற்றுத்திரனாளி பட்டதாரி ஆசிரியர்களையும் மற்றும்
பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி அரச தொழில் புரிவோரையும் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
.
இந்நிகழ்வில்
தரிசனம்,
வாழ்வோசை,ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன
மாணவர்கள் கலந்துகொண்டதுடன் , மாணவர்களின் கலை கலாசார
நிகழ்வுகளும் இடம்பெற்றது .