மட்டக்களப்பில் இந்து கிறிஸ்தவ வழிபாடுகளுடன் சுனாமி நினைவு தினம்

மட்டக்களப்பு புதியமுத்துவாரம் பகுதியில் சுனாமி அனர்த்தத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகள் நடைபெற்றன.


புதிய முகத்துவாரத்தில் உள்ள சுனாமி நினைவுத்தூபி அருகில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிவஸ்ரீ சி.குகநாதன் சர்மாவினால் கிரியைகள் நடாத்தப்பட்டதுடன் விசேட ஆத்ம சாந்தி பூஜையும் நடாத்தப்பட்டது.

அத்துடன் மட்டக்களப்பு அம்பாறை மறை மாவட்டங்களின் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினாலும் விசேட பிரார்த்தனைகள் நடாத்தப்பட்டன.

இந்த நினைவு தின நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.வியாளேந்திரன்,ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.