தேசிய விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு பெண்கள் அணி கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்தது

41வது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற பெண்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி கிழக்கு மாகாண அணியாக பங்குகொண்டு வெள்ளிப்பதக்கத்தினைப்பெற்று மாகாணத்துக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.

மாத்தறை சனத்ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய பெண்களுக்கான கிரிக்கட் போட்டியில் சப்ரகமுவ அணியும் கிழக்கு மாகாண அணியும் மோதிக்கொண்டது.

இதன்போது எட்டு ஓட்டங்களினால் வெற்றிபெற்று சப்ரகமுவ இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டதுடன் இரண்டாம் இடத்தினை கிழக்கு மாகாண அணி பெற்று சாதனை படைத்துள்ளது.

மண்முனை வடக்கு அணியை விளையாட்டு உத்தியோகத்தர் வி.பிரசாத் பயிற்றுவித்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியான கபடிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய மட்டக்களப்பு அணி தேசிய ரீதியில் முதல் இடத்தினைப்பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.