சிறைச்சாலை தண்டனை கைதிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு  இலங்கை  சிறைச்சாலைகள்  ஐக்கிய அமைப்பினால் மட்டக்களப்பு சிறைச்சாலை தண்டனை கைதிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு இன்று  இடம்பெற்றது.


மட்டக்களப்பு சிறைச்சாலை தண்டனை  கைதிகளின்  பிள்ளைகளுக்கு   இலங்கை சிறைச்சாலைகள்  ஐக்கிய  அமைப்பின்னால்  பாடசாலை கற்றல் உபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர்  கே .எம். யு .எச் . அக்பர்  தலைமையில்   சிறைச்சாலை அலுவலகத்தில் இன்று  இடம்பெற்றது .

இந்நிகழ்வின் போது சிறைச்சாலையிலுள்ள  தண்டனை  கைதிகளின்  18 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன்  அவர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல்  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்  இதன்போது சிறைச்சாலை அலுவலகத்திற்கும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு சிறைச்சாலை  பிரதான ஜெய்லர் என் . பிரபாகரன் , இலங்கை  சிறைச்சாலைகள் ஐக்கிய   அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான தலைவரும் போதகருமான ஆர்.தயாசீலன்  ,  போதகர் எஸ் . ஜோசப் மற்றும்  அமைப்பின்  உறுப்பினர்கள் , மட்டக்களப்பு சிறைச்சாலை  நலன்புரிச் சங்க பிரிவு உத்தியோகத்தர் பி .ஜி , டேவிட் . சிறைச்சாலைகள் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் எல் . ஜெயா சுசிதரன், எல் .ஜேசுதாசன் , எம் . . சபினா ஆகியோர் கலந்து கொண்டனர் . இவர்களுடன்  மட்டக்களப்பு சிறைச்சாலை தண்டனை கைதிகளின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .