மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிட திறப்பு விழா நிகழ்வு .

(லியோன்)



மட்டக்களப்பு மாவட்ட  திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையம்  திறப்பு விழாவும், கிராம அபிவிருத்தி அலுவலக  நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில்   வருடாந்த ஒன்று கூடல்  இன்று இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்ட   திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய கட்டிட திறப்பு விழாவும்  மட்டக்களப்பு மாவட்ட  கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நலன்புரிச்சங்க  வருடாந்த ஒன்று கூடல் மற்றும் பிரியா விடை  நிகழ்வும்  மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்  கே . மோகன் பிறேம்குமார் தலைமையில்  இன்று மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக  கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .  

ஆரம்ப நிகழ்வாக  அதிதிகளை  மலர் மாலை அணிவித்து  மட்டக்களப்பு  ஜெயந்திபுரம்  வானம்பாடி  கலைக்கழக   அணியினரால் பேண்ட் வாத்தியம்  இசைக்கப்பட்டு  அழைத்து வரப்பட்டனர்

இதனை தொடர்ந்து   தேசிய , மாகாண மற்றும் மாவட்ட  கொடிகள்  யேற்றத்துடன்  தேசிய கீதம் இசைக்கப்பட்டு   நிகழ்வுகள் ஆரம்பமானது .  

முதல் நிகழ்வாக  இந்நிகழ்வுக்கு முதன்மை  விருந்தினராக கலந்து கொண்ட  முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி கிராம அபிவிருத்தி , கட்டிடம்  , கிராமிய கைத்தொழில் ,போக்குவரத்து ,வீடமைப்பு ,சுற்றாடல் அமைச்சின் செயலாளர்  ஜனாப் .யு .எல் . .அஸீஸினால்  மாவட்ட மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக   கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள  மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையம்  வைபவ ரீதியாக   திறந்து வைக்கப்பட்டது

 இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன்  மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில்  2015  ஆம் ஆண்டு  சிறப்பாக சேவையாற்றி  ஓய்வு பெற்று சென்ற உத்தியோகத்தர்களையும்திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற  உத்தியோகத்தர்களை கௌரவிப்பு மற்றும் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வும்  இடம்பெற்றது .
 
 இடம்பெற்ற நிகழ்வின்  போது  மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் 2015  ஆம் ஆண்டு  சிறப்பாக சேவையாற்றி  ஓய்வு பெற்று சென்ற உத்தியோகத்தர்களுக்கும் திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற  உத்தியோகத்தர்களுக்கும்   பரிசில்கள்  வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண  பணிப்பாளர் .கா . அருந்தவராஜா , அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் ஜனாப் .எச் .கலிலூர்  ரகுமான் , திருகோணமலை    மாவட்ட  உத்தியோகத்தர்.வி.பாஸ்கரன் மற்றும் மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய ஆசிரியர்கள் ,  மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக   உத்தியோகத்தர்கள்  ஆகியோர்  கலந்துகொண்டனர் .