(லியோன்)
மட்டக்களப்பு
மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையம் திறப்பு விழாவும், கிராம அபிவிருத்தி அலுவலக நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்று கூடல்
இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி
நிலைய கட்டிட திறப்பு
விழாவும்
மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நலன்புரிச்சங்க
வருடாந்த ஒன்று கூடல்
மற்றும் பிரியா விடை நிகழ்வும்
மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
கே . மோகன் பிறேம்குமார் தலைமையில்
இன்று மட்டக்களப்பு மாவட்ட
கிராம அபிவிருத்தி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை மலர் மாலை
அணிவித்து மட்டக்களப்பு ஜெயந்திபுரம் வானம்பாடி கலைக்கழக அணியினரால் பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர் .
இதனை தொடர்ந்து தேசிய , மாகாண மற்றும் மாவட்ட கொடிகள் யேற்றத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது .
இதனை தொடர்ந்து தேசிய , மாகாண மற்றும் மாவட்ட கொடிகள் யேற்றத்துடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது .
முதல் நிகழ்வாக இந்நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட முதலமைச்சர் மற்றும் உள்ளூராட்சி கிராம அபிவிருத்தி , கட்டிடம் , கிராமிய கைத்தொழில் ,போக்குவரத்து ,வீடமைப்பு ,சுற்றாடல் அமைச்சின் செயலாளர்
ஜனாப் .யு .எல்
. எ .அஸீஸினால் மாவட்ட மாவட்ட கிராம
அபிவிருத்தி அலுவலக கட்டிட தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையம் வைபவ ரீதியாக திறந்து
வைக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் 2015 ஆம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றி ஓய்வு பெற்று சென்ற
உத்தியோகத்தர்களையும் ,
திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிப்பு மற்றும்
வருடாந்த ஒன்று கூடல்
நிகழ்வும் இடம்பெற்றது .
இடம்பெற்ற
நிகழ்வின் போது
மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் 2015 ஆம் ஆண்டு சிறப்பாக சேவையாற்றி ஓய்வு பெற்று சென்ற
உத்தியோகத்தர்களுக்கும்
, திணைக்களத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்று
சென்ற
உத்தியோகத்தர்களுக்கும்
பரிசில்கள்
வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு
மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாகாண பணிப்பாளர் .கா . அருந்தவராஜா , அம்பாறை மாவட்ட உத்தியோகத்தர் ஜனாப் .எச்
.கலிலூர்
ரகுமான் , திருகோணமலை மாவட்ட உத்தியோகத்தர்.வி.பாஸ்கரன் மற்றும் மாவட்ட திறன் அபிவிருத்தி பயிற்சி நிலைய ஆசிரியர்கள் , மாவட்ட கிராம அபிவிருத்தி அலுவலக
உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .