மட்டக்களப்பில் கோலாகலமாக நிறைவுபெற்ற இந்துமாமன்றத்தில் 60வது ஆண்டு நிறைவு விழா

மட்டக்களப்பில் நடைபெற்றுவரும் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழாவின் இறுதி நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு, சுவாமி விபுலாநந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன அரங்கில் இந்துமாமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவை மற்றும் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியம் ஆகியவை மேற்கொண்டுள்ளது.

இந்துமாமன்றத்தின் தலைவர் கந்தையா நீலகண்டன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு காயத்திரி பீட தலைவர் சிவயோகச்செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சிவதொண்டர் மாநாடு இன்று நடாத்தப்பட்டதுடன் சிவதொண்டின் மகத்துவம் தொடர்பிலான கருத்துரைகளும் வழங்கப்பட்டதுடன் சிவதொண்டர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட எ எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கௌரவிக்கப்பட்டதுடன் ஆன்மீன அதிதிகளாக இரண்டு தினங்களும் கலந்து சிறப்பித்த இந்தியாவின் இளையவட்டம் பேரூர் ஆதினம் வணக்கத்துக்குரிய சீர்வளர்சீர் மருதாசல அடிகளார், நல்லை ஆதின முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், மட்டக்களப்பு காயத்திரி பீட தலைவர் சிவயோகச்செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.