மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசக் கணேசராஜா பொறுப்பேற்பு

மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் கணேசராஜா நீதவான் இன்று  மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற கட்டடத்தொகுதியில் கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

யாழ் பருத்தித்துறை மாவட்ட நீதிபதியாக ஒரு வருடம் கடமையாற்றியதைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக நியமனம் பெற்றதையடுத்து இந்த பதவியேற்பு நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டில் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி எம்.றியாழ் கடமையாற்றியிருந்தார்.

பல்வேறு நாடுகளில் நீதிபதிகள் பயிற்சி பட்டறைகளுக்குச் சென்று பயிற்சி பெற்றதுடன், நீதித்துறையில் பதினொரு வருடகால அனுபவம் கொண்டவர். அத்துடன் சர்வதேச மனித உரிமை விருதையும், அமெரிக்காவில் சட்டமுதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.