2015 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இல்  நடத்தப்பட்ட   2015 தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது

 மட்டக்களப்பு  கல்வி வலயத்தில்   2015  ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவித்து  அவர்களுக்கு  வெற்றி கிண்ணங்களும் , பரிசில்களும் வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பு   செலிங்கோ  லைப்  கிளை  04 இன்  முகாமையாளர்  எஸ் .வேனுகரன் தலைமையில் இன்று  மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை அலுவலகத்தில் இடம்பெற்றது .  

இடம்பெற்ற  இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக  மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே . பாஸ்கரன் கலந்துகொண்டார் .

மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை    04  ஏற்பாட்டில்    2015  ஆம் ஆண்டு  தரம் ஐந்து  புலமைப்பரிசில்  பரீட்சையில் சித்தியடைந்த  மாணவர்களை கௌரவிக்கும்  நிகழ்வில்  பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  வலயக்கல்வி பணிப்பாளரினால்  மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது

இந்நிகழ்வில்  செலிங்கோ  லைப்  கிளை  பிராந்திய அபிவிருத்தி  முகாமையாளர் கே . சுமேந்திரன்மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை   மேற்பார்வையாளர்  திருமதி .எம் . சுலோஜினி , மட்டக்களப்பு செலிங்கோ  லைப்  கிளை   விற்பனை ஆலோசகர் திருமதி .ஜெ .சுமதி  மற்றும்  பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .