கட்டார் நாட்டுக்கு சென்று இலங்கை திரும்பிய வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு

(லியோன்)

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட  புதுமண்டபத்தடி  கன்னன்குடா கிராம சேவை பிரிவை சேர்ந்த நவரட்ணம் குணராஜன்  வயது 22 தொழில் நிமித்தம்  கட்டார் நாட்டுக்கு சென்று  கடந்த 13ஆம்  இரவு 12.40  மணியளவில் இலங்கை திரும்பிய  வேளையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக  பெற்றோர் வவுணத்தீவுப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .


 சம்பவம் தொடர்பாக பெற்றோர் தெரிவிக்கையில்  மட்டக்களப்பு புதுமண்டபத்தடி  கன்னன்குடாவைச் சேர்ந்த நவரெட்ணம் குணராஜன்  தனது மகன் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர்  தமது குடும்ப வறுமையின் காரணமாக  கட்டார் நாட்டுக்கு தொழில் நிமித்தம்  சென்றதாகவும் அங்கு சென்ற பின்னர் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் கடந்த 13.12.2015 அன்று தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு கட்டுநாயக்க  விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் ,அன்றைய தினம்  தனது மகனை  அழைத்து வரச்சென்ற தந்தை வெகுநேரமாக விமான நிலையத்தில்  காத்திருந்தும் தனது மகன் வராததால்   விமான நிலையப் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்ததாக தெரிவித்தார் .

அதனை தொடர்ந்து காணாமல் போன தனது மகனுடன்  கட்டார் நாட்டில் இருந்து  கட்டுநாயக விமான நிலையத்தில்  வந்து இறங்கிய மொரட்டுவையைச் சேர்ந்த  குனராஜனின் நண்பனுடன் தொடர்பு கொண்டு  விசாரித்த போது  குணராஜன்    விமானநிலையத்துக்கு வந்து சோதனைகள் முடியும் வரை  தன்னுடன்  இருந்ததாகவும் அதன் பின்னர் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக குனராஜனின் தந்தை மட்டக்களப்பு வவுணதீவு  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்  எனினும் இது வரை தனது மகன் தொடர்பாக எதுவித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை  குனராஜனின் பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர் .

காணாமல் போயுள்ள  தனது மகன் தொடர்பாக எவருக்கேனும் தகவல் தெரிந்தால், 0779424185, 0772768735 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு பெற்றோர் கோரியுள்ளனர்.