சகோதரர்களிடையே இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் பலி –மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் சகோதரர்களிடையே நடைபெற்ற கைகலப்பின்போது படுகாயமடைந்தவர் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு, புதூர், வீச்சுக்கல்முனை மூன்றாம் குறுக்கை சேர்ந்த இ.பாலேந்திரன் (44வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று புதன்கிழமை பகல் குறித்த நபரின் சகோதரருக்கும் இவருக்கும் இடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறிய நிலையில் பொல்லினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்கிய உயிரிழந்தவரின் சகோதரரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.