பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தொடர்பில் கிழக்கு மாகாணசபையில் தனி நபர் பிரேரணை

கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாதுகாப்பு விலக்கப்பட்டது தொடர்பில் இன்று காலை கிழக்கு மாகாணசபையில் வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாணசபை அமர்வு மாகாணசபையின் தவிசாளர் ஏ.பி.கலப்பதி சந்திரதாஸ தலைமையில் மாகாணசபை அமர்வு கூடியது.

இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுக்கினால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பொலிஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டது தொடர்பில் தனி நபர் பிரேரணை ஒன்றுகொண்டுவரப்பட்டது.

தமக்கு வழங்கப்பட்ட இரண்டு பொலிஸ் பாதுகாப்பு முன்னறிவித்தல் இன்றி விலக்கப்பட்டுள்ளதாகவும் நேரம் காலம்பாராது செயற்பட்டுவரும் தமக்கு இது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதனால் தமக்கான பாதுகாப்பினை மீளவழங்குமாறும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டது.