கொக்கட்டிச்சோலையில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை-மகிழடித்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.


இன்று செவ்வாய்க்கிழமை மாலை 7.30மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியுள்ளதுடன் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மோட்டார் சைக்கிள்களில் சென்ற நால்வரும் படுகாயமடைந்த நிலையில் மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

கன்டர் வாகனத்தினை முந்திச்செல்ல முயன்ற மோட்டார் சைக்கிளே இந்த விபத்தில் சிகிக்கியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.