தீபாவளி தினத்தை முன்னிட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டு - சிறைச்சாலைக்கு விஜயம்

( லியோ )     

தீபாவளி தினைத்தை முன்னிட்டு  மட்டக்களப்பு மாவட்ட  தமிழ் தேசிய  கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்  மட்டக்களப்பு  சிறைச்சாலைக்கு  விஜயத்தை மேற்கொண்டனர் .

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான  வியாலேந்திரன் மற்றும்  எஸ் . யோகேஸ்வரன்  ஆகியோர் அங்குள்ள  தமிழ் அரசியல்  கைதிகளை பார்வையிட்டதோடு   அவர்களது நலன் தொடர்பாகவும் விசாரித்துள்ளனர் .

இதனை தொடர்ந்து  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான வியாலேந்தின்ரன்  தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டதோடு   அவர்களது  வீடுகளுக்கு சென்று அவர்களின் குடும்ப நலன்களை விசாரித்ததுடன் அவர்களுக்கு  தேவையான   அத்தியாவசிய பொருட்களையும்  பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை  கற்றல்  உபகரணங்களையும்  வழங்கி வைத்துள்ளார்  .